Tuesday 31 October 2017

மூலக்கூற்று வாய்பாடு


       மூலக்கூற்று வாய்பாடு

                மூலக்கூற்று வாய்பாடு அல்லது வேதியியல் வாய்பாடு (chemical formula) என்பது ஒரு சேர்மத்தில் உள்ள அணுக்களின் அளவுகளை விவரிக்கிறது. ஒரு சேர்மத்தின் எடையை கணிப்பதற்கும் அச்சேர்மத்தின் மூலக்கூற்று வாய்பாடே பயன்படுகிறது. [1]
ஐதரசன் பரவொட்சைட்டின் (ஈரைதரசன் ஈரொட்சைட்டு) மூலக்கூற்று வாய்பாடு H2O2 ஆகும். இந்த வாய்பாடு மூலம் இந்த மூலக்கூற்றில் இரண்டு ஐதரசன் அணுக்களும் இரண்டு ஒட்சிசன் அணுக்களும் உள்ளன என்று தெரிகிறது.

Saturday 28 October 2017

வேதியியலில் தனிமம் (இலங்கை வழக்கு: மூலகம்) என்பது அடிப்படையான தனிப்பட்ட ஒருவகை அணு ஆகும். ஒவ்வொரு தனிமத்திற்கும் ஓர் அணு எண் உண்டு. இந்த அணுவெண் அணுக்கருவில் உள்ள நேர்மின்னிகளின் (புரோட்டான்கள்) எண்ணிக்கை ஆகும். இது ஒவ்வொரு தனிமத்திற்கும் ஒரு தனிச்சிறப்பான எண். பரவலாக அறியப்படும் ஹைட்ரஜன் (இலங்கைத் தமிழ்: ஐதரசன்), ஆக்ஸிஜன்(இலங்கைத் தமிழ்: ஒட்சிசன்), நைட்ரஜன் (இலங்கைத் தமிழ்: நைதரசன்), தங்கம்வெள்ளிஇரும்பு போன்றவை வெவ்வேறு தனிமங்கள் ஆகும்.
நீர் என்பது இரு தனிமங்கள் சேர்ந்த ஒரு மூலக்கூறு ஆகும். நீரானது இரு ஹைட்ரஜன் அணுக்களும், ஓர் ஆக்ஸிஜன் அணுவும் சேர்ந்த ஒரு மூலக்கூறு. உணவில் சேர்த்துக்கொள்ளும் உப்பானது சோடியம் என்னும் தனிமமும், குளோரின் என்னும் தனிமமும் சேர்ந்த சோடியம் குளோரைடு என்னும் ஒரு மூலக்கூறு. நம் உடல் உட்பட, நாம் அறியும் எல்லாப் பொருட்களும் தனிமங்களாலும், தனிமங்கள் சேர்ந்த மூலக்கூறுகளாலும் ஆனவையே.
தனிமங்கள் என்பது புவிக்கோளில் மட்டும் அல்லாது சூரியன் நிலவு, நட்சத்திரங்கள் ஆகிய அனைத்திலும் இருப்பவை ஆகும்.
2006 ஆம் ஆண்டு இறுதி வரையிலும் மொத்தம் 117 தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவற்றுள் அணுவெண் 1 கொண்ட ஹைட்ரஜன் முதலாக அணுவெண் 94 கொண்ட புளுட்டோனியம் வரை உள்ள 94 தனிமங்களும் இயற்கையில் கிடைப்பன. எஞ்சியுள்ளன செயற்கையாக ஆய்வகங்களில் மிக மிகச் சிறிதளவு செய்து ஆய்வு செய்யப்படுவன. அணுவெண் 83 கொண்ட பிஸ்மத்என்னும் தனிமமும் அதற்கு அதிகமான அணுவெண் கொண்ட தனிமங்களும் நிலையற்ற வடிவம் கொள்வன. இயற்கையாகவே அணுச்சிதைவுற்று, பிற தனிமங்களாக காலப்போக்கில் மாறுவன.


முதன் முதலாக தனிமங்களை அட்டவணைப்படுத்திய டிமித்திரி மெண்டலீவின் 1869 ஆம் ஆண்டுப் பட்டியல்

Friday 27 October 2017

அளவீடு

அளவீடு என்பது ஒரு பொருள் அல்லது நிகழ்வின் சிறப்பியல்பை, மற்ற பொருள்கள் அல்லது நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு அடையாளம் அறிந்து ஒரு எண்ணை வழங்கும் செயல் ஆகும்.[1][2]. அளவுகள், அளக்கும் முறைகள், அளவீடு கோட்பாடுகள், அளவுப்படி அமைத்தல், அளவுப்பொறியமைப்பு போன்ற அளத்தலுடன் தொடர்புடைய கூறுகளை ஆயும் இயலைஅளவியல் (en:Metrology எனலாம். அளத்தல் அறிவியலுக்கு அடிப்படை என்பதனால் அளவியலும் அறிவியலின் முக்கிய பிரிவுகளில் ஒன்றாகும்.
ஒரு குறிப்பிட்ட அளவை அளத்தல் என்பது அதன் மதிப்பை நிலையான மற்றொரு மதிப்போடு ஒப்பிட்டுக் கூறுவது ஆகும். இந்த நிலையான அளவு 'அலகு' எனப்படுகிறது. கணிதம்இயற்பியல்கட்டுபாட்டுவியல்புள்ளியியல்கணினியியல் ஆகிய துறைகளும்அளவியலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன.[3] இயற்கை அறிவியல் மற்றும் பொறியியலில் அளவீடுகள், பொருட்கள் அல்லது நிகழ்வுகளின் பெயரளவு பண்புகளைப் பின்பற்றுபது கடினமாக உள்ளது. அவை பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அளவியலின் பன்னாட்டு சொற்பட்டியலுடனும், வழிகாட்டுதல்களுடனும் இணக்கமாக உள்ளன.[2] இருப்பினும் மற்ற துறைகளான புள்ளிவிபரவியல் சமூக அறிவியல் மற்றும் நடத்தை அறிவியலில் அளவீடுகள் பல நிலைகளைக் கொண்டிருக்கலாம். அவை, பெயரளவு, வரிசை அளவு, இடைவெளி, விகித அளவுகோல்கள் எனும் பல்வேறு பிரிவுகளைக் கொண்டுள்ளன.
வணிகம்அறிவியல்தொழில்நுட்பம், அளவுசார் ஆய்வு ஆகியவற்றின் பல துறைகளிலும் அளவியல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு அளவியல் முறைகள் மனிதகுலம் தோன்றியது முதல் அறிமுகப்படுத்தப்பட்டு வந்துள்ளன. பங்குதாரர்கள் அல்லது உடனுழைப்பவர்களுக்கிடையே ஏற்படும் இடம்சார்ந்த உடன்பாட்டின் அடிப்படையில் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்துள்ளன. 18 ஆம் நூற்றாண்டு முதல் இவை ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட வழக்கத்தில் அனைவராலும் ஏற்று நடைமுறைப்படுத்தப்படும் முறை ஒன்றை நோக்கி நகர்ந்தது. அவ்வாறு தரப்படுத்தப்பட்ட, பரந்தளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறையே அனைத்துலக முறை அலகுகள் முறையாகும். இந்த முறையானது பொருள்சார் அளவீடுகள் அனைத்தையும் ஏழு அடிப்படை அலகுகள் இணைந்த கணிதவியல் அளவீடாக மாற்றிக் கொடுத்தது.

Wednesday 25 October 2017

வேதிச்சமன்பாடு

 

    தாவரங்கள் தமக்குத் தேவையான உணவை ஒளிச்சேர்க்கை என்ற வேதி வினையின் மூலம்  தயாரித்து கொள்கின்றன.
                                                    
கார்பன்-டை-ஆக்ஸைடு + நீர் 
சூரிய ஒளி
--------->                                  ^ கார்போஹைட்ரேட்+ஆக்ஸிஜன் | 
பச்சையம்
இவ்வாறு வேதிவினைகள் சார்ந்த விபரங்களைத் தொகுத்து சுருக்கமாகத் தெரிவிப்பது வேதிசமன்பாடு ஆகும்.
அயனிகளின் வகைகள் :
   ஒரு அணு மின்னேற்றம் பெறும்போது  அயனி என்று அழைக்கப்படுகிறது.
நேர்மின்சுமை  அல்லது  எதிர்மின்சுமை ஏற்ற அணுக்களோ, அணுக்களின் தொகுப்போ அயனிகள் ஆகும்.
நேர்மின் அயனிகள் :
      மின்சுமையற்ற ஒரு அணு ஒன்று அல்லது பல எலக்ட்ரான்களை இழக்கும்போது நேர்மின்னேற்றம் அடைகிறது. இது நேர்மின் அயனி என்று அழைக்கப்படுகிறது.
எதிர்மின் அயனிகள்:
   ஒரு அணு ஒன்று அல்லது பல எலக்ட்ரான்களை ஏற்கும்போது எதிர்மின்னேற்றம் அடைகிறது.இதனால் இந்த அணு எதிர்மின் அயனி என்று அழைக்கப்படுகிறது.

அணு அமைப்பு – II (Atomic Structure – II)

1. இனக்கலப்பு வரையறு.
 ஏறக்குறைய சமமான ஆற்றல் கொண்ட அணுவின் ஆர்பிட்டால்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து சமமான ஆற்றலுடைய, ஒத்த வடிவமுடைய ஆட்பிட்டால்களை தருவது.
2. துகள் மற்றும் அலை வேறுபடுத்துக.
வ. எண்
துகள்
அலை
1
துகளானது அண்டத்தில் நன்கு வரையறுக்கப்பட்ட இடத்தைப் பெற்றுள்ளது.
அலையானது அனைத்து 
இடங்களிலும் 
பரவி காணப்படுகிறது.
அலையானது ஒரு குறிப்பிட்ட இடத்தைப்
பெற்றிருப்பதில்லை.
2
ஒரு துகள் ஒரு குறிப்பிட்ட  இடத்தை ஆக்கிரமித்திருக்கும்  போது மற்றொரு துகள் அந்த இடத்தை ஆக்கிரமிப்பதில்லை.
இரண்டு அல்லது அதற்கு
மேற்பட்ட அலைகள் ஒரே
இடத்தை ஆக்கிரமிக்கும்.
3
ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள துகள்களின் எண்ணிக்கையானது அவற்றின் கூடு தலுக்கு சமமாக இருக்கும். அதாவது கூடுதலாகவோ  அல்லது குறைவாகவோ இருக்காது.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் 
உள்ள அலைகளின்
எண்ணிக்கையானது
அவற்றின் குறுக்கீட்டுப்
பண்பின்  காரணமாக 
மொத்த எண்ணிக்கையைவிட  கூடுதலாகவோ அல்லது 
குறைவாகவோ இருக்கும்.
 3. பிணைப்புத்தரம் என்றால் என்ன?
பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டால்களில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கைக்கும் (Nb) எதிர்பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டால்களில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கைக்கும் (Na) உள்ள வேறுபாட்டில் பதியளவாகும். அதாவது,
 பிணைப்புத்தரம் = ½ (Nb – Na) 
4. ஹைய்சன்பர்க்கின் நிலையில்லா கொள்கையை எழுது.
ஒரே நேரத்தில் மிகவும் துல்லியமாக நுண் துகளின் நிலை மற்றும் திசைவேகம் (அல்லது உந்தம்) ஆகியவற்றை அளவிடமுடியாது.
கணிதவியல் முறைப்படி நிலையில்லா கோட்பாடு
Δx . Δp ≥ h / 4π
இங்கு,
Δx = துகளின் நிலையில் உள்  நிலையில்லாத்தன்மை
Δp = துகளின் உந்தத்தில் உள்ள நிலையில்லாத்தன்மை 
அல்லது
Δx . mΔv ≥ h / 4π
இங்கு,
Δx = துகளின் நிலையில் உள்ள நிலையில்லாத்தன்மை
Δv = துகளின் திசைவேகத்தில் உள்ள நிலையில்லாத்தன்மை
  m = நிறை 
5. ஹைட்ரஜன் உருவாவதற்கான முக்கிய காரணங்கள் யாவை?
1. ஹைட்ரஜன் பிணைந்துள்ள அணு அதிக எலக்ட்ரான் கவர் ஆற்றலை பெற்றிருக்கும் போது பிணைப்பு முனைவுடன் இருக்கும்.
2. ஹைட்ரஜன் பிணைந்துள்ள அணுவின் உருவளவு சிறியதாக இருக்கும்போது அது பிணைப்பு எலக்ட்ரான் இணையை தன்பால் ஈர்க்கும்.
 அல்லது
ஹைட்ரஜன் பிணைந்துள்ள அணுவின் உருவளவு சிறியதாகவும், அதிக எலக்ட்ரான் கவர் ஆற்றலையும் பெற்றிருந்தால் ஹைட்ரஜன் உருவாவது சாத்தியமாகும். 
6. எலக்ட்ரான் ஆற்றலின் எதிர்குறியின் முக்கியத்துவம் யாது?
 முடிவிலாத் தொலைவிலுள்ள ஓர் எலக்ட்ரானின் ஆற்றல் தோராயமாக பூஜ்ஜியம் எனக் கொள்வோம். இந்நிலையானது பூஜ்ஜிய ஆற்றல் நிலை எனப்படும். எலக்ட்ரான் நகர்ந்து, அணுக்கருவின் கவர்ச்சிக்கு உட்படும்போது, அது குறிப்பிட்ட வேலையை செய்வதால் ஆற்றலை இழக்கிறது. எனவே, எலக்ட்ரானின் ஆற்றல் குறைந்து கொண்டே வந்து பூஜ்ஜியத்தைவிட குறைவாகிறது. அதாவது,எதிர்குறி மதிப்பைப்பெறுகிறது. 
7. He2 ஏன் உருவாகவில்லை?
1. ஹீலியத்தின் எலக்ட்ரான் அமைப்பு (Z = 2) 1s2
2. ஒவ்வொரு ஹீலியம் அணுவும் இரண்டு எலக்ட்ரான்களை பெற்றிருப்பதால் He2 மூலக்கூறில் 4 எலக்ட்ரான்கள் உள்ளன.
3. He2 மூலக்கூறின் எலக்ட்ரான் அமைப்பு He2: (σ1s)2 (σ *1s)2
4. He2 மூலக்கூறின் ஆர்பிட்டால் வரைபடம்

Nb = 2 மற்றும் Na = 2 எனில் 
 5. பிணைப்புத்தரம் = Nb - Na / 2 = 2 - 2 / 2 = 0
பிணைப்புத்தரம் பூஜ்ஜியமாக இருப்பதால் He2 மூலக்கூறு உருவாகாது

Sunday 22 October 2017

முதல் அனுப்பிளவு

முதன் முதல் அணுப்பிளவு இயக்க அறிவிப்பு
ஆய்வு ரசாயனத்தில் [Analytical Chemistry] வல்லுநரான, பிரிட்ஷ் ஸ்டிராஸ்மன் 1929 இல் டாக்டர் பட்டம் பெற்று, 1934 இல் ஆட்டோ ஹான் ஆய்வுக் கூடத்தில் சேர்ந்தார். நியூட்ரான், யுரேனிய அணுக்கரு இயக்கத்தில், யுரேனியம் தகர்க்கப் பட்டு, முடிவில் உண்டான சிறு துணுக்குகளை முறையாகப் பிரித்து, அவற்றில் ஒரு விளைவு பேரியம் [Barium Element] என்று கண்டு பிடிக்க உதவியவர், பிரிட்ஷ் ஸ்டிராஸ்மன்! ஆட்டோ ஹான், ஸ்டிராஸ்மன் இருவரும் பேரியம் ஒன்றை மட்டும் கண்டார்கள்! அந்த சமயத்தில் அதே அணுக்கரு இயக்கத்தைச் செய்து பார்த்த ஐரீன் கியூரி, பிரடெரிக் ஜோலியட் தம்பதிகள் தாம் பிரித்தெடுத்த லாந்தனம் மூலகம் [Lanthanam Element] ஒன்றை மட்டும் கண்டார்கள்! 1932 இல் முதன் முதல் யுரேனிய அணுவைப் பிளந்த இத்தாலிய மேதை என்ரிக்கோ ஃபெர்மி, புதிதாய் விளைந்த யுரேனியக் கதிர் ஏகமூலத்தை மட்டும் கண்டு, தவறாகத் தான் மூலக மாற்றம் செய்து விட்டதாகக் கருதினார்! யானையின் ஓர் அங்கத்தைத் தடவி வர்ணித்த குருடர்போல், ஒவ்வொரு குழுவினரும் ஏதாவது ஒன்றை மட்டும் கண்டு, மற்றவற்றை ஆராய முடியாமல் விட்டு விட்டு அணுக்கருப் பிளவு இயக்கத்தின் மகத்தான முழு வடிவத்தைக் காண முடியாமல் போனார்கள்!
மித வேக நியூட்ரான், யுரேனியம்235 அணுப்பிளவு இயக்கம் 1 :-
யுரேனியம்235 + நியூட்ரான்1 –>யுரேனியம்236* (தேய்ந்து) –>
–>பேரியம்139* + கிரிப்டான்95* (தேய்ந்து) –>
–>மாலிப்டினம்95* + லாந்தனம்139* + 2 புது நியூட்ரான்1 + 200 MeV சக்தி
மித வேக நியூட்ரான், யுரேனியம்235 அணுப்பிளவு இயக்கம் 2 :-
யுரேனியம்235 + நியூட்ரான்1 –>யுரேனியம்236* (தேய்ந்து) –>
–>ருபீடியம்93* + சீஸியம்140* + 2 புது நியூட்ரான்1 + 200 MeV சக்தி
[(*) குறி  கதிரியக்க மூலகத்தைக் காட்டுகிறது]

Saturday 21 October 2017

Global warming

Global warming, also referred to as climate change, is the observed century-scale rise in the average temperature of the Earth's climate system and its related effects.[1][2] Multiple lines of scientific evidence show that the climate system is warming.[3][4][5] Many of the observed changes since the 1950s are unprecedented in the instrumental temperature recordwhich extends back to the mid-19th century, and in paleoclimate proxy records covering thousands of years.[6]
In 2013, the Intergovernmental Panel on Climate Change (IPCC) Fifth Assessment Report concluded that "It is extremely likely that human influence has been the dominant cause of the observed warming since the mid-20th century."[7] The largest human influence has been the emission of greenhouse gases such as carbon dioxidemethane and nitrous oxideClimate model projections summarized in the report indicated that during the 21st century, the global surface temperature is likely to rise a further 0.3 to 1.7 °C (0.5 to 3.1 °F) in the lowest emissions scenario, and 2.6 to 4.8 °C (4.7 to 8.6 °F) in the highest emissions scenario.[8] These findings have been recognized by the national science academies of the major industrialized nations[9][a] and are not disputed by any scientific body of national or international standing

Friday 20 October 2017

முக்குணத் துணை மருந்து

சுக்கு, மிளகு, திப்பில் ஆகிய மூன்றையும் உலர்த்தி சுத்தம் செய்து சம எடை எடுத்து இடித்து துல்லியமாக தூள் செய்து வைத்துக் கொள்வது தான் 'முக்குணத்துணை மருந்து' என்பது. இதை நோய்த் தடுப்பு மருந்தாக சிறுவர் முதல் பெரியவர் வரை உபயோகிக்கலாம். மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்களுடைய தொழில் ஆக்கம், காத்தல், அழித்தல் என்பன போன்று இந்த முக்குண துணை மருந்தும் உடலுக்குத் தேவைகளை ஆக்கி, தேவையற்றவைகளை அழித்து வெளியேற்றி உடலைக்காக்கும் தன்மையது. இம்மருந்து வைத்திராத சித்த மருத்துவர் கிடையாது என்று துணிந்து கூறலாம். ரசபாஷாண வகைகளை இதை துணை மருந்தாக சேர்த்துக் கொடுப்பதில் நோய் சிக்கல் அடையாமல் விரைவில் குணமாவதுடன் ரசபாஷாண நஞ்சு மருந்துகளால் வாய்வு பிடிப்பு, வேக்காடு ஆகிய கெடுதல் குணம் உண்டாகாது என்பது சித்தர்களின் வாக்கு.
அளவு
குழந்தைகளுக்கு இரு மிளகளவு வெந்நீருடன், சிறுவர்களுக்கு இருமடங்கும், பெரியோர்களுக்கு வயதுக்குத் தக்கபடி 10 முதல் 15 அரிசி எடை இம்மருந்தை பொதுவாக தருவார்கள். 'திரிகடுகம்' என்றும் இதனை சொல்வதுண்டு.

ஐந்தீ சுடர் மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், ஏலம் இவைகளைச் சுத்தம் செய்து சம எடை எடுத்து வெய்யிலில் உலர்த்தி இடித்து துல்லியமாக தூள் செய்து ஒரு புட்டியில் வைத்துக் கொள்க. அளவு 10 முதல் 20 அரிசி எடை தேன், நெய், வெந்நீர் ஆகிய துணைகொண்டு காலை மாலை இருவேளை பித்தநாடி மிகுந்த போது காணும் அதிஉஷ்ணம், மார்பு எரிச்சல், பக்க சூலை அனல் வாய்வு, பித்த புளியேப்பம், வயிற்றுப் புசம், பசியின்மை, வறட்சி ஆகியவைகள் ஐந்தீச்சுடர் பட்ட மாத்திரம் தீயில் பட்ட பஞ்சுபோல் பறக்கும்! இதைத் துணை மருந்தாக அமைத்து சண்ட மாருத செந்தூரம், ஆறுமுக செந்தூரம், அயம், காந்தம் முதலானவைகளுக்கு சமயோசிதம் போல் சித்த மருத்துவர்கள் கையாண்டு நீடித்த பல நோய்களைத் திறமையாக போக்கி விடுவார்கள். இம்மருந்தை 'பஞ்ச தீபாக்கினி' என்றும் கூறுவார்கள்.

Thursday 19 October 2017

EUGEN GOLDSTEIN

In 1886 Eugen Goldstein noted that cathode-ray tubes with a perforated cathode emit a glow from the end of the tube near the cathode. Goldstein concluded that in addition to the electrons, or cathode rays, that travel from the negatively charged cathode toward the positively charged anode, there is another ray that travels in the opposite direction, from the anode toward the cathode. Because these rays pass through the holes, or channels, in the cathode, Goldstein called them canal rays.
figu6_6b.gif (24045 bytes)
When the cathode of a cathode-ray tube was perforated, Goldstein observed rays he called "canal rays," which passed through the holes, or channels, in the cathode to strike the glass walls of the tube at the end near the cathode.  Since these canal rays travel in the opposite direction from the cathode rays, they must carry the opposite charge.

Saturday 14 October 2017

மனித உடலின் அமைப்பு


மனித உடலின் அமைப்பு மற்றும் அவைகளின் செயல்பாடுகள்

மனித உடலானது எலும்புகளினாலான கட்டமைப்பில் தசைகளும் பல்வேறு உறுப்புகளும் சேர்த்து ஆனது ஆகும். முதலுதவி செய்பவருக்கு மனித உடல் மற்றும் உறுப்புகள் பற்றி முழுமையாக தெரியாவிட்டாலும் ஒரளவிற்கு அவற்றின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் தெரிந்தால் ஆபத்துக் காலங்களில் முதலுதவி அளிப்பது எளிதாக இருக்கும்.

மனித எலும்புக் கட்டமைப்பு

மனித உடலானது 206 எலும்புகளாலான ஒரு கட்டமைப்பு ஆகும். இதில் மண்டை ஒடு, முதுகெலும்புகள், மார்பெலும்புகள், இடுப்பெலும்புகள் மேல் மற்றும் கீழ் எலும்புகள் எனப் பலவகைப்படும்.

தசைகள்

எலும்புகள் போல் அல்லாமல் தசைகள் மிருதவானவை. எலும்புகளின் மேலே கட்டமைப்பில் மேல் அமையப்பட்டிருக்கும் தசைகள் மனித உடலுக்கு ஒரு உருவத்தைக் கொடுக்கிறது. இவை இரண்டு வகைப்படும்.
  1. நமது இச்சைக்குட்பட்டு செயல்படும்
  2. தானாகவே செயல்பட்டு கொண்டிருக்கும்.
அதாவது இருதயம் போன்ற அவயங்களில் உள்ள தசைகள் அணிச்சா தசைகள் ஆகும். இவை தானாகச் செயல்படும். மூட்டுக்களைச் சுற்றியுள்ள தசை நார்கள் பாதிக்கப்பட்டால் அதற்கு சுளுக்கு என்று பெயர்.

நரம்புகள்

மூளையிலிருந்துப் பெறப்படும் கட்டளைகளை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் உறுப்புகளுக்கும் எடுத்துச் செல்வது நரம்பு மண்டலம் ஆகும்.

தோல்

எலும்பு, தசை மற்றும் உடல்உறுப்புக்களை வெளிப்புறத்தில் மூடியுள்ள தோல், மனித உடம்பில் உணர்ச்சிகளை உறுப்புக்களுக்குத் தெரிவிக்கும் முக்கிய பகுதியாகும்.

உடலின் உள் உறுப்புகள்

இவை தவிர மூளை, இதயம், மூச்சுக்குழல், நுரையீரல், கல்லீரல், மண்ணிரல், உணவு சீரமைப்பு மண்டலம், சிறுநீரகம் மற்றும் இனப்பெருக்க உறுப்புக்கள் மனித உடலில் அமையப் பெற்றுள்ளன. முதலுதவி செய்பவருக்கு மேற்கண்ட முக்கிய உறுப்புக்கள் உடலில் எப்பகுதியில் இருக்கின்றன என்பதைத் தெரிந்து வைத்திருத்தல் அவசியம்.

நம் உடலின் உள்உறுப்புகள் அமைப்பின் முறைகள்:

வாயின் உட்புறத்தில் கழுத்துப் பகுதியில் தொண்டையும் மார்புக்கூட்டின் மேற்பகுதியில் இடது வலது நுரையீரல்களும் மார்பின் நடுப்பகுதியில் இருதயமும் வலது பக்கம் கல்லீரல் வலதுபக்கம் மார்பு பகுதிக்கு சற்று கீழே மண்ணிரல் இரைப்பை மற்றும் வயிற்றுப்பகுதியில் பெரும்பகுதியை பெருங்குடலும் சிறுகுடலும் நிரப்பி உள்ளது. இடுப்பின் மேல் பாகத்தில் முதுகெலும்புக்கு பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு சிறுநீரகத்துக்கும் சிறுநீர்ப்பை இடுப்பு எலும்பின் முன்பாகத்தில் கீழ்மட்டத்தில் உள்ளன. இவை தவிர இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் சிறுநீர்ப்பையும் அமைந்துள்ளன.

உடலில் நடக்கும் செயல்பாடுகள்

உடலுக்குள் ஏற்படும் செயல்பாடுகளுக்கும் அதனால் ஏற்படும் மாற்றங்களையும் குறித்து தெரிவிக்கும் பகுதிக்கு உடல் வினையியல் என்று பெயர். நமது உடலின் பல தனித்தனி பாகங்களும் செயல்பாடுகளும் ஏற்படுகின்றன. அவ்வாறான பாகங்களுக்கு "அவயம்" என்றும் அதன் வேலைகளுக்கு "செயல்பாடுகள்" என்றும் பெயர். உடலின் முக்கிய வேலைகளான சுவாசித்தல், இரத்த ஓட்டம், செரிமானம், கழிவுப்பொருட்களை வெளியேற்றுதல் போன்றவைகளை சில அவயங்களை ஒருங்கிணைந்து செயல்பட வைக்கின்றன. உதாரணமாக உணவை செரிமானம் செய்ய வாய், உணவுக்குழாய், இரைப்பை, கல்லீரல், கணையம், குடல்கள், போன்ற அவயங்கள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றது.

உயிர்வளி

உயிர்வளி உயிர்வாழ இன்றியமையாததாகும். இது நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து கிடைக்கும். நாம் உண்ணும் உணவுகளிலிருந்து கிடைக்கும் புரதப்பொருட்கள் இரத்தச் சிவப்பணுக்களால் சேர்க்கப்பட்டு இரத்தத்தோடு நுரையீரலுக்கு செல்லும்போது அங்கு சுவாசித்தலினால் கிடைக்கும் உயிர்வளியைக் கிரகித்து கொண்டு மீண்டும் இருதயத்திற்கு வந்து உடம்பின் எல்லா பாகங்களிலும் உள்ள உயிர் அணுக்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. உடலில் உள்ள உயிரணுவுக்கும் திசுக்களுக்கும் இரத்தத்தின் மூலமாக பிராணவாயுவும், உணவுப்பொருள்களிலிருந்து கிடைக்கும் சத்துப் பொருள்களினாலும், உயிரணுக்களுக்கும் திசுக்களும் வளரவும், வெப்பம் சக்தி உண்டாக்கவும் உதவுகின்றது.

இருதயம்

இருதயம் என்னும் அவயம் உட்குழிவோடு இரண்டு நுரையீரல்களுக்கு மத்தியில் மார்புக்கூட்டில் உள்ளது. அது ஒரு "பம்ப்" போல் வேலை செய்கின்றது. அது நான்கு அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உடம்பின் எல்லா பாகங்களிலிருந்து வரும் கரியமில வாயு நிறைந்த இரத்தம் சிரைகள் மூலம் இருதயத்தின் வலது மேலறையில் கொட்டுகிறது. இருதயம் சுருங்கும் போது வலது மேலறையிலிருந்து வலது கீழறைக்கு இரத்தம் வருகின்றது. அங்கிருந்து நுரையீரல்களுக்கு அனுப்பப்படுகின்றது. நுரையீரலில் இரத்தம் கரியமிலவாயுவை வெளியேற்றி விட்டு புதிதாக பிராணவாயுவை உள்ளிழுத்துக் கொள்கிறது. சுத்தமடைந்த இரத்தம் இடது மேலுறையை வந்தடைகின்றது. மேலறை சுருங்கும்போது கீழறைக்கு தள்ளப்பட்டு அங்கிருந்து உடம்பின் எல்லா பாகங்களுக்கும் விசையோடு தமணிகள் தந்துகிகள் மூலமாக எடுத்துச் செல்லப்படுகின்றது.

நாடித்துடிப்பு

ஒவ்வொரு முறையும் இருதயம் சுருங்கி இரத்தத்தை விசையோடு வெளியே தள்ளும் போது இரத்தமானது தமணிகளைப் பெருக்கமடையச் செய்கின்றது. இந்த பெருக்கம் இரத்தம் தமணியில் ஓடுகின்ற இடங்களில் காணப்படும். இந்த இரத்த அலைகளை தோலுக்கு அருகாமையில் உள்ள தமணிகளில் உணர முடியும். அதுவே "நாடித்துடிப்பு" எனப்படும். சாதாரணமாக நாடித்துடிப்பு கையின் மணிக்கட்டுப் பகுதியில் உணரப்படுகின்றது. இதே போன்று கழுத்து, கன்னத்தின் மேல்பாகம், தொடையும் அடிவயிறும் சேருமிடம் மற்றும் கணுக்கால் போன்ற பகுதிகளில் உணரமுடியும். சராசரி வயதுடைய ஒருவருக்கு ஒரு நிமிடத்திற்கு 72 முறை துடிப்பினை உணரமுடியும்

Friday 13 October 2017

உடல் உள் உறுப்புகளும்

உடல் உள் உறுப்புகளும் நோய்களும்

E-mailPrintPDF

மானிட உடலமைப்பிலே, மறைந்து கிடக்கும் ரகசியங்களும், அதிசயங்களும் ஆய்வுக்கு அடங்காதவையாகும். மானிட உடலமைப்பினை ஆய்வுசெய்யும் போது அதன் அற்புத அமைப்பானது,அரிய பெரிய உண்மைகளையும் அளப்பெரிய தத்துவங்களையும் புதிது புதிதாக நமக்குக் காட்டி வருகின்றது. நளினமான உடலின் மே​ன்மைத் தன்மைகள், நமது எண்ணங்களில் இனிமையாய் மீட்டுகின்றன.
Anatomy எனக் கூறப்படும் ஆங்கிலச் சொல்லானது, Anatome என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து உருவானதாகும். வாழும் உயிரினங்களின் உடலமைப்பைத் தெரிந்துகொள்ள,பிளந்து ஆய்வு செய்யும் முறை எனும் அர்த்தத்தில் இந்த சொல் உருவாகியுள்ளது.
உடல் அமைப்பு 

மனித உடல் பல செல்களால் ஆக்கப்பெற்றது
செல்
உயிரினத்தின் வாழ்க்கைக்கு செல் தான் அடிப்படை அமைப்பாகும். உயிர் வாழும் விலங்குகள், தாவரங்கள் எல்லாமே செல்களால்தான் உண்டாகியிருக்கின்றன. 
செல்லின் அமைப்பு
விலங்குகளின் செல்கள் பல வடிவம் கொண்டவை. அவை கோளமாகவோ அல்லது பட்டகம் போலவோ அல்லது நீண்டோ, வால் போன்றோ அமைந்த வடிவமுடன் விளங்குகின்றன.
ஒரு செல்லின் இன்றியமையாத அடிப்படைக் குணங்களாக அமைந்திருப்பவை:

• வளர்கின்ற பண்பு
 
• உணர்கின்ற திறன்
• இனப்பெருக்கம்
• உணர்ச்சிகளை ஒரு புறத்திலிருந்து இன்னொரு புறத்திற்கு கடத்துகின்ற பண்பு 
• வளர்சிதை மாற்றம்
• இயங்கும் தன்மை
புரதங்கள், கொழுப்புகள், மாப்பொருள்கள், தண்ணீர், உப்புச் சத்துக்கள் என்பவற்றால் ஒரு செல்லானது உருவாக்கப்படுகிறது.
செல்லின் பாகங்கள்
• செல் உறை
• உட்கரு
• சைட்டோபிளாசம்
திசுக்கள் 
மனித உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும், பலவகைப்பட்ட திசுக்களால் ஆனதாகும். திசுக்கள் என்பவை செல்களின் கூட்டத்தினால் உருவாக்கப்படுகின்றன. ஆகவே ஒவ்வொரு திசுவும், திட்டவட்டமான அமைப்பும் செயல்முறையும் கொண்டதாகவும், ஓர் உயிர்ப்புள்ள மண்டலமாகவும் இயங்குகிறது. 
உயிரினத்தின் ஒப்பற்ற அமைப்பான இந்தத் திசுக்கள் ஐந்து வகைகளாகப் பிரிந்து இயங்குகின்றன.
• எபிதீலியத் திசு
• இணைப்புத் திசு
• தசைத் திசு
• நரம்புத் திசு
• இரத்தத் திசு

உடற் தொகுதிகள் 

எமது உடலில் உள்ள அடிப்படை ஆதாரத்தாயாக விளங்குவது செல்கள்.செல்கள் பலவாகச் சேர்ந்து திசுக்கள் உண்டாகும். திசுக்கள் பலவாகச் சேர்ந்து உறுப்புக்கள் உண்டாகும். ஒரே மாதிரியான பணிகள் கொண்ட உறுப்புக்கள் பல சேர்ந்து உடற் தொகுதிகள் உண்டாகும். இவ்வாறு எம் உடலில் பல தொகுதிகள் உள்ளன.
• எலும்புத் தொகுதி
• தசைத் தொகுதி
• குருதிச்சுற்றோட்டத் தொகுதி
• சுவாசத் தொகுதி
• சமிபாட்டுத் தொகுதி
• நாளமில்லாச் சுரப்பித் தொகுதி
• நரம்புத் தொகுதி
• கழிவுத் தொகுதி
• சிறுநீரகத் தொகுதி
நரம்புத் தொகுதியின் பாகங்களும் தொழிற்பாடுகளும் 
நரம்புகள் 
நரம்பு மண்டலம் முழுவதும்,நரம்புத் திசுக்களால் அமையப் பெற்றிருக்கிறது. நரம்பு செல்கள் பல ஒரு நரம்பாக ஆகிவிடுகிறது. நரம்புகள் அவற்றின் செயலுக்கேற்ப இரு வகைப்படும்.
1. உணர்ச்சி நரம்புகள் 
ஐம்பொறிகளிலிருந்தும் மற்றும் தேகம் முழுவதிலிருந்தும் செய்திகளை மூளைக்கு எடுத்துச் செல்கிற நரம்புளை உணர்ச்சி நரம்புகள் என்பர். இவற்றை உட்செல்லும் நரம்புகள் எனவும் அழைப்பர். 
2. செய்கை நரம்புகள் 
அறிதலை உணர்ந்துகொண்டு, மூளை அனுப்புகிற செய்திகளை எடுத்துக் கொண்டு, உத்திரவாகத் தருகிற பணியை மேற்கொள்கிற நரம்புகளை, செய்கை நரம்புகள் என்பர். அவற்றை வெளிச்செல்லும் நரம்புகள் என்றும் கூறலாம். 

மாணவர் மைய கற்றல்

மாணவர் மைய கற்றல்  என்பது கற்பவர் மையக் கற்றல் முறை.இது ஆசிரியர் கற்பிக்கும் அடக்குமுறை கல்விக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறை. மண...